தாடிக் கிழவன்
கண்டது தான்
திராவிடக் கழகம்
திராவிடக் கிழவன்
பிறந்த மண்தான்
இந்த நிலம்
பெரியார் என்று
பேராச்சு
ஈரோடு என்பது
ஊராச்சு
பெரியார் பிறந்த.
இந்த மண்ணில்
நடக்குது
மண்டலம் மாநாடு
இது
திராவிட முன்னேற்ற
கழகத்திற்கு
சொந்தமான. தொரு
தாய்வீடு
இங்கே விதைக்கும்
சொற்கள் நெற்கள்
அறுவடை செய்யும்
அன்னாளே
தமிழகத்தில்
தன்னிகரற்ற.
திமுகாவின்
ஆட்சி மலரும்
நன்நாளே
காணக் கண்கோடி போதாது
கழகத்துக்
கண்மணிகள்
அணி திரளும் போது
காணும் இடமெல்லாம்
மக்கள் வெள்ளம்
காடும் மேடும்
வீடும் நாடும்
கூடிக் கூடிக்
கலந்ததுரையாடு
இனம் மானம்
காக்கும் தலைவர்கள்
போர்முரசாக முழங்கும்
முழக்கங்கள்
செவிப்பாறையில்
செதுக்கி வைக்கும்
செந்தமிழில்
சிந்தனைச் சொற்கள்
தேனைச் சேகரிக்கும்
தேனீக்கள் போல
வாக்குகளைச் சேகரித்து
வழங்குவோம் வாரீர்
தளபதியின் கரம்
வலுப்பெரும்
தமிழர்களின் மானம்
தலை நிமிரும்
அணிதிரண்டு வாரீர்
அலைகடல் என வாரீர்
ஆர்ப்பரித்து வாரீர்
ஆர்வம் நிறைந்து வாரீர்
திருப்பூர்
தம்பிதுரை
அமைப்பாளர்
கொங்கு நகர் பகுதி விவசாயத்தொழிலாளர.அணி .... திருப்பூர்