Monday, February 19, 2018

கவிஞன்

பொய் சொல்வது
தவறு என்று
போதித்தாள்
என் அன்னை

ஒழுக்கம் எனக்குள்
வரவேண்டும் என்று

பொய் சொல்வது
தவறில்லை

பொய் 
சொல்பவர்கள் தான் 
  பொருளும் புகழும் 
சேர்தனர்

போட்டுடைத்தார் 
  என் தந்தை

என்னப்பா 
சொல்கிறீர்கள் 
வியப்போடு கேட்டேன்
விபரத்தைச் சொன்னார்

கம்பன் 
காளிதாசன் முதல் 

கண்ணதாசன் 
வாலி தாண்டி 
வைரமுத்து வரை

பொய் 
சொல்லித்தான்
பொருளும் புகழும் 
சேர்த்னர்

பொய்யிலே பிறந்து
பொய்யிலே வளர்ந்து
புலவர் பெருமான் என்கிறார்

கண்ணுக்கு 
மை அழகு
கவிதைக்கு 
பொய் அழகு

ஒரு பொய்யாவது
சொல் கண்ணே

உன் காதலன்
நான் தான் என்று

அந்தப் பொய்யில்
உயிர் வாழ்வேன்

ஆகவே
பொய் சொல்வது
தவறில்லை என்றார்

நானும் யோசித்தேன்
நானும் முயற்சித்தேன்

சாதாரணப்
பெண்ணைப் பார்த்து
மானே மீனே
மயிலே குயிலே என்றேன்

நம்பிவிட்டார்கள் இந்தப் பெண்பிள்ளைகள்

நானும் புறப்பட்டேன்
பொய் சொல்லவதற்கு
        தம்பிதுரை

No comments:

Post a Comment