நம் ரத்த சொந்தங்கள்
நமது பிள்ளைகள்
நம் பிள்ளைகளின்
பிள்ளைகள்
நம் பிள்ளையின்
பேரப்பிள்ளைகள்
என எத்தனையோ பேர்கள்
நமக்கு இருந்தும்
இருந்தும் இல்லாமல்
இருக்கின்றோம்
இந்த உலகில் இருந்தும்
தனியாக தவிக்கிறோம்
உன் உயிருக்கு ஏதேனும்
நோய்நொடிகள் வந்திடுமோ
என் உயிருக்கு ஏதேனும்
ஆபத்துகள் வந்திடுமோ என.
எத்தனை காலங்கள் நாம்
இருவரும் பயந்து
இளமை காலத்தில்
ஒன்றாக இணைந்து
வாழ்ந்திருப்போம்
எப்போது இருளும்
எப்போது விடியும் என
எதிர்பார்த்த காலங்கள்
எல்லாமே மாறிப்போய்
எதற்காக இருள்கிறது
எதற்க்காக விடிகிறது
என்பது கூடத் தெரியாமல்
எல்லாக் காலங்களுமே
நமக்கு இப்போது
ஒன்றாகத்தானே தெரிகிறது
இன்று
ஓர் தாயும் மகனும் போல
ஓர் தந்தையும் மகளும் போல.
நம் உறவு மாறிப்போனதே
எத்தனை எதிர்ப்பு
எத்தனை பிரச்சினைகள்
எத்தனை கருத்து வேறுபாடுகள் எதற்கும் இடம் கொடுக்காமல்
இணைந்து நாம்
வாழ்ந்ததினாலே
இன்றளவும் நாம்
உயிர் வாழ்கிறோம்
யார் துணையும்
இல்லாமலே
இதுவே
இயற்கை நம்மைப்
பிரிக்காமல்
இணையாக
அழைத்துக்கொண்டால்
அதுவே
ஆணுக்கும் பெண்ணுக்கும்
அன்பிற்கு கிடைக்கும்
வெகுமதியாகும்
கணவன் மனைவியின்
காதலுக்கு கிடைத்த
வெற்றியாகும்
தம்பிதுரை
No comments:
Post a Comment