Wednesday, February 21, 2018

மாணவர்கள்

மாணவர்கள்

யானையின் பலம் 
கொண்டவர்கள் 

தன் பலம் 
என்ன என்பதை 
யானையைப் போல
உணராதவர்கள் 

மாணவர்கள் 
கூறிய போர்வாள்கள் 
வெட்டிச் சாய்க்கும் 
திறன் இருந்தும் 
வெட்டத் தெரியாதவன் 
கைகளிலே 
வீனாகப் போகின்றார்கள்

அவனுக்குள் இருக்கும் 
அறிவு ஆற்றல் 
அடங்காத காட்டாறாய் 
பெருக்கெடுக்கும் 
நீர் ஊற்றாய் 

மாணவர்கள் 
வானத்திலிருந்து
பொழிகின்ற.
மழைத்துளிகள் 

கங்கையிலோ 
காவேரியிலோ 
இவர்கள் விழாமல் 

சில நேரம் சில பேர்கள்
சாக்கடையில் 
விழுந்துவிடுகிறார்கள்

மாணவர்கள் 
வைரமாகவோ 
மாணிக்கம் ஆகவோ 

விலைமதிக்க முடியாத.
அலங்காரப் பொருளாக இருக்கவேண்டும் என.
எண்ணாதீர்கள் 

அவன்
அனைத்தையும் 
சுட்டு எரிக்கும் 
நெருப்பைப் போன்றவன்

மாணவர்கள் வீரியம்
மற்றவர்களால்  
மட்டம் தட்டப்படுகிறது 

உண்மையில் 
மாணவர்கள் 
அவர்களின் 
வாழ்க்கையை
அவர்கள் 
வாழவேயில்லை 

பெற்றோர்கள் பெரியோர்கள் கற்றோவர்கள் மற்றவர்கள்
இவர்களின் கற்பனைக்கு
செயல்வடிவம் தருகின்றான்

வெற்றிகளைத் 
தனதென்று 
இவர்கள் 
பரித்துக் கொள்வார்கள்

தோல்விகளை 
இவனது தோலில்
தொங்கவிடுவார்கள் 

சரியான.
பாதையைக்  காட்டிவிட்டால் நினைத்ததை நடத்துவார்கள்

மாணவர்கள் 
வைரமானவர்கள் அல்ல

மாணவர்கள்
வைராக்கியம் ஆனவர்கள்

தீண்டும் வரை 
அவர்கள் இங்கே 

வெறும் திரியாகத்தான் 
தெரிவார்கள்

தீண்டி விட்டால் 
அன்றே தெரியும் 
அவர்கள்  திரியல்ல.
உலகையே சுட்டெரிக்கும்

சூரியனின்
தீப்பொறிகள் என்று

சுடு தனியாத
தம்பிதுரை

No comments:

Post a Comment