Tuesday, February 20, 2018

பட்டுப்போன மரம்

ஏய்
பட்டுப்போன மரமே

உன்னை
விட்டுப்போன உறவால்
காய்ந்து சுறுங்கி
தனிமையில்
வெறுமையில்
தவிக்கின்றாய்

நீ பசுமையாய்
இருக்கும்போது
உன் இடத்தில்
உன் நிழலில்
இளைப்பாரியவர்கள்

உன் காய் கனிகளை
சுவைத்தவர்கள்

உன் காற்றை
சுவாசித்தவர்கள்

உன்னை விட்டு
விலகியதால்
நீ பட்டுப் போனாயா

நீ பட்டுப் போனதால்
உன்னை விட்டு
விலகிப் போனார்களா

உனக்கு மட்டும்
இந்த நிலையில்லை

சில வீட்டுக் கிழத்துக்கும்
இந்த நிலைதான்

இருவருமே
எரிவதற்க்காக
காத்து நிற்கின்றீர்கள்

உன்னை
எரிப்பதற்காகவே 

பார்த்திருப்பவர்கள்

வீட்டில் உள்ள கிழம்
எப்போது எரிப்போம் எனக்    காத்திருக்கிறார்கள்

இன்று நீ நாளை நான்
என்பதை மறந்த உலகம்

         தம்பிதுரை


No comments:

Post a Comment