Saturday, March 3, 2018

அழகு

அழகு

அழகு என்பது  
உன் புன்னகையில் 
இருக்கிறது

நீ புன்னகையில் 
பூக்கும்போது 

என் உள்ளமது 
பூரிக்கின்றது 

சூரியன் போல் 
உன் கண்கள் 
சுடர்விட்டுச் 
சிரிக்கின்றது 

இதழ்கள் திறந்து 
பற்கள் 
பளிச்சிடும் போது 

சிப்பி திறந்து 
முத்துக்களாய் 
ஜொலிக்கின்றது 

உன் பூரிப்பில்
கன்னமிரண்டும் 
தாமரை போல் 
மலர்கின்றது 

சிரித்துக்கொண்டே  நீ
நடக்கும்போது 

ஓர் நந்தவனமே 
நகர்வதுபோல உள்ளது 

மகிழ்ச்சி 
என்ற ஒன்று 

உன் மனதுக்குள்
இல்லையென்றால் 

பூரிப்பு என்ற பூ 
உன் முகத்திலே பூக்காது 

மகிழ்ச்சியும் பூரிப்பும் 
  வற்றாமல் குறையாமல் 
வாழ்நாள் முழுவதும் 
வரவேண்டும் உன்னோடு 

வரவேண்டும் 
வளரவேண்டும் என.
வாழ்த்துகிறேன் 
அன்போடு
             தம்பிதுரை .....


No comments:

Post a Comment