அழகு
அழகு என்பது
உன் புன்னகையில்
இருக்கிறது
நீ புன்னகையில்
பூக்கும்போது
என் உள்ளமது
பூரிக்கின்றது
சூரியன் போல்
உன் கண்கள்
சுடர்விட்டுச்
சிரிக்கின்றது
இதழ்கள் திறந்து
பற்கள்
பளிச்சிடும் போது
சிப்பி திறந்து
முத்துக்களாய்
ஜொலிக்கின்றது
உன் பூரிப்பில்
கன்னமிரண்டும்
தாமரை போல்
மலர்கின்றது
சிரித்துக்கொண்டே நீ
நடக்கும்போது
ஓர் நந்தவனமே
நகர்வதுபோல உள்ளது
மகிழ்ச்சி
என்ற ஒன்று
உன் மனதுக்குள்
இல்லையென்றால்
பூரிப்பு என்ற பூ
உன் முகத்திலே பூக்காது
மகிழ்ச்சியும் பூரிப்பும்
வற்றாமல் குறையாமல்
வாழ்நாள் முழுவதும்
வரவேண்டும் உன்னோடு
வரவேண்டும்
வளரவேண்டும் என.
வாழ்த்துகிறேன்
அன்போடு
தம்பிதுரை .....
No comments:
Post a Comment