Thursday, March 22, 2018

ஈரோடு மண்டல மாநாடு

தாடிக் கிழவன் 
கண்டது தான்
திராவிடக் கழகம் 

திராவிடக் கிழவன் 
பிறந்த மண்தான் 
இந்த நிலம் 

பெரியார் என்று 
பேராச்சு 
ஈரோடு என்பது 
ஊராச்சு 

பெரியார் பிறந்த.
இந்த மண்ணில் 

நடக்குது 
  மண்டலம் மாநாடு 

இது

திராவிட முன்னேற்ற
கழகத்திற்கு 
சொந்தமான. தொரு 
தாய்வீடு 

இங்கே விதைக்கும் 
சொற்கள் நெற்கள் 
அறுவடை செய்யும் 
அன்னாளே 

தமிழகத்தில்
தன்னிகரற்ற.
திமுகாவின்  

ஆட்சி மலரும்  
நன்நாளே 

காணக் கண்கோடி போதாது 

கழகத்துக்
கண்மணிகள் 
அணி திரளும் போது

காணும் இடமெல்லாம் 
மக்கள் வெள்ளம்

காடும் மேடும் 
வீடும் நாடும் 
கூடிக் கூடிக்
 கலந்ததுரையாடு 

இனம் மானம்
காக்கும் தலைவர்கள் 
போர்முரசாக முழங்கும்
முழக்கங்கள் 

செவிப்பாறையில் 
செதுக்கி வைக்கும் 
செந்தமிழில் 
சிந்தனைச் சொற்கள் 

தேனைச் சேகரிக்கும் 
தேனீக்கள் போல
வாக்குகளைச் சேகரித்து
வழங்குவோம் வாரீர் 

தளபதியின் கரம் 
வலுப்பெரும் 
தமிழர்களின் மானம் 
தலை நிமிரும் 

அணிதிரண்டு வாரீர் 
அலைகடல் என வாரீர் 
ஆர்ப்பரித்து வாரீர் 
ஆர்வம் நிறைந்து வாரீர்

                        திருப்பூர் 
                      தம்பிதுரை
                    அமைப்பாளர் 
                கொங்கு நகர் பகுதி       விவசாயத்தொழிலாளர.அணி                       ....      திருப்பூர்

No comments:

Post a Comment