Tuesday, March 13, 2018

அமுதம்

பாறையில்  விழுகின்ற
பாலில் ஒரு துளி 

பசியால் அழுகும் 
பச்சிளம் பாலகனின் 

வாயில் விழுந்தால்
வறுமை ஒழியும் 

பசியில் துடிக்கும் 
குழந்தைகளின் 
வயிறுகள் நிறையும் 

குடிக்கும் பாலைக் 
குடம் குடமாக

கல்லில் ஊற்றி அதை
  சேறாக மாற்றி 

சாக்கடைக்கு செல்லும் 
கழிவுப் பொருளாக.

மாற்றம் பெறுகின்றது 
மடி சுரந்த பால். 

அமுதம் என்பதை 
யாரும் கண்டதில்லை 

நாம் வாழும் உலகில் 
உயிர் வாழும் வகையில்

பசியைப் போக்கும் 
உயிரைக் காக்கும் 

உண்மையான அமுதம் 
உணவுப் பால் தான் 

இதை உணராத
ஜென்மங்கள் 
உலகில் இருப்பது
உண்மையில் வீன்தான்
          தம்பிதுரை....

No comments:

Post a Comment