பாறையில் விழுகின்ற
பாலில் ஒரு துளி
பசியால் அழுகும்
பச்சிளம் பாலகனின்
வாயில் விழுந்தால்
வறுமை ஒழியும்
பசியில் துடிக்கும்
குழந்தைகளின்
வயிறுகள் நிறையும்
குடிக்கும் பாலைக்
குடம் குடமாக
கல்லில் ஊற்றி அதை
சேறாக மாற்றி
சாக்கடைக்கு செல்லும்
கழிவுப் பொருளாக.
மாற்றம் பெறுகின்றது
மடி சுரந்த பால்.
அமுதம் என்பதை
யாரும் கண்டதில்லை
நாம் வாழும் உலகில்
உயிர் வாழும் வகையில்
பசியைப் போக்கும்
உயிரைக் காக்கும்
உண்மையான அமுதம்
உணவுப் பால் தான்
இதை உணராத
ஜென்மங்கள்
உலகில் இருப்பது
உண்மையில் வீன்தான்
தம்பிதுரை....
No comments:
Post a Comment