தூரத்திலிருந்து
நான் பார்த்தேன்
துடிக்கும் இளமையில்
நின்றாள் இளம் மயில்
தோழன் தோலில்
சாய்ந்திருந்தேன்
தோழிகளோடு
பவனி வந்தாள்
கண்களைப்
பார்த்ததும்
எண்ணங்கள்
அனைத்தும்
சிற்றெறும்பு போல
சுரு சுருப்பாயின
மின்னலைப் போல.
சிரிப்பு ஒன்று
இதழுக்குள்ளே
வந்து போயின.
பட்டாம்பூச்சி
இமைகளாய் மாறி
மெல்ல மெல்லவே
மூடித் திறந்தன.
இதழில் பூத்த.
புன்னகை பூக்கள்
இதயம் வரையில்
சென்று மணந்தன.
கண்ணில் இருந்த.
காந்த அம்புகள்
கண்ணைச்
சிமிட்டினாள்
பாய்ந்து வந்தன.
பார்க்கவேண்டிய.
விழிகள் இரண்டும்
பரவசத்தில்
துள்ளிக் குதித்தன.
கண்களைச் சிமிட்டி
இமைகள் வெட்டும்
கண்ணியின்
கண்ணின்
வெட்டைக் கண்டு
வானைக் கிழித்து
மேகம் தாண்டும்
மின்னல் கீற்று
தோற்றுப் போயின.
ஜன்னல் காற்றுகள்
வீசியும் கூட.
ஆனந்தத்தில் முகம்
வேர்த்துப் போயின.
கண்ணியின்
கடைக்கண்
ஜாடையிலே
இளம்
காளையர் வீழ்வது
இந்தப் பார்வையிலே
.தம்பிதுரை.....
No comments:
Post a Comment