Friday, April 21, 2017

அழுகை

அழுகை
மனிதனுக்கு
 இயற்கை கொடுத்த
 மாபெரும் கொடை

அழுகை
உன் ஆனந்தத்தையும்
உன் வேதனைகளையும்
 நீ சொல்லாமலேயே அது
பிறருக்கு சொல்லிவிடும்

அழுகை
சில நேரம் அது
உன் உயிர்காக்கும் 
கேடயமாகிறது
அதுவும் உனக்குத் 
தெரியாமலே

உன் துக்கத்தை 
நெஞ்சுக்குள் 
கரைக்கிறது
உன் சோகத்தை 
வெகுவாக 
குறைக்கின்றது

அழுகைபலவிதம்
ஆனால் எல்லாமே 
 மிக அற்புதம்

கோடி கொடுத்தாலும்
கிடைக்காத சுகம் ஓர்
அழுகையிலே 
கிடைத்துவிடும்

கோடி கிடைத்த 
மகிழ்ச்சியைக்கூட
 இந்த அழுகைதான்
 வெளிக்காட்டும்

நன்றி 
என்பது கூட
 வார்த்தைகளைக் காட்டிலும்
அழுகையே 
மிக அழகான 
கவிதையாக கூறும்

சிரிப்புக்கு பிறகு
 அழுகை மட்டுமே
 உன்னை 
குழந்தையாக காட்டும் 
ஆற்றல் பெற்றது

சிரிப்பைக் காட்டிலும் 
அழுகையே
பல வெற்றிகளையும் பெற்றது

சிரிப்பு உன்னை
அழகானவனாக காட்டும்

அழுகை உன்னை மிகப்
 புதியவனாகக் காட்டும்

அழுகை
உனக்கு பல ஞானத்தைக் கொடுக்கும்

நீ பிறக்கும் போது
 நீ அழுதாலும்
நீ இறக்கும் போது 
பிறரையும் அழவைக்கும்

அழுகை 
அசிங்கமானதல்லா 
ஆழாமானது,   
அற்புதமானது 
 மிகவும் ஆனந்தமானது 

.........தம்பிதுரை......

No comments:

Post a Comment