Friday, January 27, 2017

ஜெ மரணம்

தங்கமே
 இதுவரையில்  
 உழைத்தது
 போதுமென்று  
 ஓய்வெடுத்து 
 உறங்குகிறாயா

 சிங்கமே
 உன் சீற்றத்தின்  
 கண்களை நீ
 திரையிட்டு 
  நித்திரையில் 
   இருக்கின்றாயா 

 புள்ளி மானை  
 துள்ளிக் குதித்த
 பொற்பாதம் ஓய்ந்ததா

 பூங்குயிலாய் பாடிய குரல்
போதுமென்று சாய்ந்ததா

 கர்ஜித்த கனிர்குரல்
 ஓசையின்றி உறங்கியதே

 எதிரிகளை கைநீட்டி
 சவாலுக்கு அழைத்த கரம்


 ஏன் இங்கு 
  கைமடித்து  
 பெட்டிக்குள்  
 உறங்குகிறாய்

 காலத்தின்  
  கட்டாயமா
 இயற்கையின்  
 கோரப்பசிக்கு
 உன் உடலும் இரையானதா

 மக்கள்

 அழுகின்ற கண்ணிரும் 
 வங்கத்து அலைகடலாய்
 ஆற்பறித்து பொங்கியதே

 மக்கள் கதருகின்ற
 ஒலக்குரல்
 வானம் தொட்டு எட்டியதே

 எதையுமே கேட்காமல்
 ஏன் இன்னும் உறங்குகிறாய்

 மக்கள்
 தவிப்பதை காணாமல்
 தன்நினைவின்றி 
  தூங்குகிறாய்

 அம்மா அம்மா என்று
அழுகின்ற குழந்தைகளும்

 அம்மா அம்மா என்று
 அழுகின்ற அம்மாக்களும்

 ஒன்றாக அழும்குரல்
 உன் காதில் விழவில்லையா

 எத்தனையோ போராட்டங்கள்
 போராடி நீ வெற்றி கண்டாய்

 எமனோடு மற்றும் போராடி
 ஏன் அவனை வெள்ளவிட்டாய்

 எதை கேட்டாலும்  
 கொடுக்கும் நீ 

உன் உயிரைக் கேட்டதால்
 கொடுத்துவிட்டாயா

 உன் உடல் மறைந்தாலும்
உன் பகழ் மறையாது

 உன் பிள்ளைகளின்
 உள்மனது  -  அது
 நீ வாழும் கோவில் அது

தத்தளித்துக் கதருகின்ற
தமிழகத்தில் 

 தம்பிதுரையும் 
 ஒருவன் தான்..............

No comments:

Post a Comment