ஜில் என்று சலங்கை ஒலி
ஜிவ் என்று மேல்லெலும்பும்
ஜிவ் என்று மேல்லெலும்பும்
ஓடிவந்த வாலிபர்களில்
ஒருவனாக நானிருந்தேன்
ஒருவனாக நானிருந்தேன்
உன் அழகை கண்டவுடன்
ஓரத்தில் ஒதுங்கிவிட்டேன்
துள்ளி ஓடும் புள்ளி மானுக்கு
வெள்ளிச்சலங்கை கட்டியது போல்
தோகையிளம் மயிலுக்கு
பொன்னாடை
போர்த்தியது போல்
நீ நடந்தாய்
போர்த்தியது போல்
நீ நடந்தாய்
உன் பாதம் பட்ட மண்ணுக்கு கூட
வானத்து விண்மீன்கள்
உன் விழியில் அள்ளிவைத்து
நிலவென்னும் வட்டமுகம் தாங்கியதோ
நீர் தாங்கும் கருமேகம்
நீ வளர்த்த பட்டு வண்ணக்கூந்தலோ
நீ வளர்த்த பட்டு வண்ணக்கூந்தலோ
மூங்கிலிலே தோல் செய்து
வெண்டை பிஞ்சு விரல் வைத்து
கை வீசி நடக்கையிலே - என்
கண் பட்டு விட்டதடி
கண் பட்டு விட்டதடி
கோடி மலர் மணம் உண்டு
உன் கூந்தலுக்கு . அதில்
குறுக்கே எதற்கடி தாழம்பூ
உன் கூந்தலுக்கு . அதில்
குறுக்கே எதற்கடி தாழம்பூ
கோவைக்கனியை
இரண்டாய் பிளந்து
இரண்டாய் பிளந்து
கொம்புத்தேனில்
நனைத்தது போல் இதழ்கள்
நனைத்தது போல் இதழ்கள்
ஆரடி நிள அழகு கூந்தலை
கருநாகமென பின்னியிருக்க
தேற்க்கும் வடக்கும் எட்டி எட்டி
பார்த்து செல்கின்றது
நீர் தாங்கும் குடம் ஒன்றை
நீ தாங்கி போகையிலே
நீ தாங்கி போகையிலே
நுலான நுலிடை
அது தாங்குமா
இந்த எடை- என்று
என்மனம் வாடுதடி
அது தாங்குமா
இந்த எடை- என்று
என்மனம் வாடுதடி
ஆடை கொஞ்சம் தூக்கி கட்டி
வாழைத்தண்டு காலை காட்டி
ஏன்னை வதைப்பதேனடி வாலிபமூட்டி
வானவில்லின் வடிவை போல
வளைந்து நீயும் நாணம் கொள்ள
வானத்து தேவதையே
வந்த விட்டால் உன் வடிவில்
வந்த விட்டால் உன் வடிவில்
வாலிபவட்டம் முதல்
வயதினர்கள் கூட்டம் வரை
வயதினர்கள் கூட்டம் வரை
வாய் பிளந்து பார்க்கும் வண்ணம்
வரைந்து வைத்த ஓவியமே
நீ மட்டும் என்
வாழ்க்கை துணையாய்
வந்து விட்டால்
காலமெல்லாம் வடிப்பேன் காவியமே
தம்பிதுரை
No comments:
Post a Comment