Tuesday, December 27, 2016

ஜல்லிக்கட்டு

ஜல்லிக்கடடு
 மாடும் மனிதனும் ஒன்றாக
 இணைந்து உழைப்பவர்களே.

 அறுவடை காலம் முடிந்த பிறகு
 சோம்பல் இல்லாமல் 
 சுறு சுறுப்பாக இருக்க

. மாடும் மனிதனும்
 சுய பயிற்சி 
  எடுத்து கொள்ளவும்

 இருவருக்கும் 
இருக்கும் நட்பை
 மேலும் வளர்த்து 
 கொள்ளவும். 

 அடுத்த வருகின்ற தலைமுறையினர்
 மாட்டின் மேல் உள்ள 
 அச்சம் நீங்கி  
இணைந்து பழகவும்.

 உழைப்பையும் 
 வீரத்தையும் 
ஒருவர் மேலே ஒருவர்
 காட்டிக்கொள்ளும் 
  அன்பையும்.

 கொச்சை படுத்தி 
அசிங்கப்படுத்தி 
இந்த வீர விளையாட்டை 
 தடை செய்து. 

 ஒரு கலாச்சாரத்தின் அடையாளத்தையும்
 அழிக்க நினைப்பவர்கள்  யாராகிலும்
 அவர்களை வளரவிடக்கூடாது.

 நம் விளையாட்டு 
 நம் பாரம்பரியம்
 நம் நாகரிகம் 
 நம் கலாச்சாரம்
 நம் நட்புறவு 
 நம் பண்பாடுகளை
 நாம் தான் காத்துக் கொள்ளவேண்டும்.

 இதற்குக் கூட
 ஒன்று இனையாத தமிழர்கள்
 ஒற்றுமை இல்லாத மனிதர்கள்.

 தமிழர்கள் என்று
 சொல்லிக் கொள்வதிலோ
 தமிழர் திருநாள் என
 கொண்டாடி மகிழ்வதிலோ 
எந்த பலனும் எந்த பயனும்
 உள்ளதாக. உணரவில்லை

 வீரனை 
கோழையாக்கும்.
 கோழைகளின் 
 பொய் கூச்சலுக்கு.
 நாம் பயந்து வீரத்தை
 நாம் இழந்தால்.
 இழப்பு இன்று நமக்கல்ல
 வருங்கால நம் சமூகத்திற்கு

 நாகரிகம் என்ற பெயரில்
 நாம் நமது சாஸ்திரம்
 சம்பரதாயம்

 கலாச்சாரம் பண்பாடு
 கலை இலக்கியம் வீர விளையாட்டுகள்

கிராமியக்கலை  
கிராமத்து உணவு
இயற்கை மருத்துவம்

 உடல் ஆரோக்கியம் தரும்
 விளையாட்டுகள் 
என எல்லாவற்றையும் 
இழந்து மறந்து விட்டோம்

இனி இருப்பதையும்
 தொலைத்து விட்டு

 மீண்டும் ஒரு முறை
 சோம்பேறிகளாக 
அடிமைகளாக

 வாழ பழகிக் கொள்வோம்

 இது . தம்பிதுரையின்ஆதங்கம்

No comments:

Post a Comment