வனம்
அடர்ந்த காடு
அதிலே
அதிலே
ஓங்கி
உயர்ந்த மலைகள்
உயர்ந்த மலைகளின்
உச்சி வகுந்தெடுத்த
ஆற்றுப் பள்ளம்
உச்சி வகுந்தெடுத்த
ஆற்றுப் பள்ளம்
மலைகளின் மேலே
கொட்டிய மழைத் துளி
கொட்டிய மழைத் துளி
பள்ளம் நோக்கி
பாய்ந்து பெருக்கெடுத்து
பாய்ந்து பெருக்கெடுத்து
காட்டாற்று
வெள்ளமென
காட்டிற்கு நடுவிலே
காட்டிற்கு நடுவிலே
குறுக்கே இருக்கும்
அகன்ற பாறைகளின்
நெற்றி மீது
ஏறி நின்று
நெஞ்சை
நிமிர்த்திக் கொண்டு
பூமி மீது
விழுகின்ற காட்சி
வற்றாமல்
உயிர் காக்கும்
வானத்துக்கும்
வனத்துக்கும்
இணைத்திருக்கும்
நீர்வீழ்ச்சி
இந்த வனம்
இல்லையென்றால்
உயிர்கள் எல்லாம்
அழிந்துவிடும்
இந்தவனமே
உண்மையில்
உயிர்காக்கும்
நந்தவனமே
உயிரோடு
வாழும்போது
மனிதன்
கான்கின்ற சொர்கம்
உண்மையைச்
சொன்னால்
நகரம் என்பது நரகம்
நகரம் என்பது நரகம்
வனம் என்பது
மனிதனுக்கு
இயற்கை
கொடுத்த வரம் .
............ தம்பிதுரை.......
No comments:
Post a Comment