Friday, April 21, 2017

வனம்

வனம்

அடர்ந்த காடு
அதிலே 

ஓங்கி 
உயர்ந்த மலைகள்

உயர்ந்த மலைகளின்
உச்சி வகுந்தெடுத்த
ஆற்றுப் பள்ளம்

மலைகளின் மேலே
கொட்டிய மழைத் துளி

பள்ளம் நோக்கி
பாய்ந்து பெருக்கெடுத்து

காட்டாற்று 
 வெள்ளமென
காட்டிற்கு நடுவிலே

குறுக்கே இருக்கும் 
 அகன்ற பாறைகளின்

நெற்றி மீது  
 ஏறி நின்று 

நெஞ்சை  
 நிமிர்த்திக் கொண்டு

பூமி மீது  
 விழுகின்ற காட்சி 

 வற்றாமல் 
 உயிர் காக்கும் 

 வானத்துக்கும் 
 வனத்துக்கும்
 இணைத்திருக்கும்  
 நீர்வீழ்ச்சி

இந்த வனம்  
 இல்லையென்றால் 

 உயிர்கள் எல்லாம்  
 அழிந்துவிடும்

இந்தவனமே 
  உண்மையில்
 உயிர்காக்கும்  
 நந்தவனமே

உயிரோடு  
 வாழும்போது 
 மனிதன்  
 கான்கின்ற சொர்கம்

உண்மையைச்
 சொன்னால்
நகரம் என்பது நரகம்

வனம் என்பது  
 மனிதனுக்கு
 இயற்கை  
 கொடுத்த வரம் .

............ தம்பிதுரை.......

No comments:

Post a Comment