Thursday, March 22, 2018

ஈரோடு மண்டல மாநாடு

தாடிக் கிழவன் 
கண்டது தான்
திராவிடக் கழகம் 

திராவிடக் கிழவன் 
பிறந்த மண்தான் 
இந்த நிலம் 

பெரியார் என்று 
பேராச்சு 
ஈரோடு என்பது 
ஊராச்சு 

பெரியார் பிறந்த.
இந்த மண்ணில் 

நடக்குது 
  மண்டலம் மாநாடு 

இது

திராவிட முன்னேற்ற
கழகத்திற்கு 
சொந்தமான. தொரு 
தாய்வீடு 

இங்கே விதைக்கும் 
சொற்கள் நெற்கள் 
அறுவடை செய்யும் 
அன்னாளே 

தமிழகத்தில்
தன்னிகரற்ற.
திமுகாவின்  

ஆட்சி மலரும்  
நன்நாளே 

காணக் கண்கோடி போதாது 

கழகத்துக்
கண்மணிகள் 
அணி திரளும் போது

காணும் இடமெல்லாம் 
மக்கள் வெள்ளம்

காடும் மேடும் 
வீடும் நாடும் 
கூடிக் கூடிக்
 கலந்ததுரையாடு 

இனம் மானம்
காக்கும் தலைவர்கள் 
போர்முரசாக முழங்கும்
முழக்கங்கள் 

செவிப்பாறையில் 
செதுக்கி வைக்கும் 
செந்தமிழில் 
சிந்தனைச் சொற்கள் 

தேனைச் சேகரிக்கும் 
தேனீக்கள் போல
வாக்குகளைச் சேகரித்து
வழங்குவோம் வாரீர் 

தளபதியின் கரம் 
வலுப்பெரும் 
தமிழர்களின் மானம் 
தலை நிமிரும் 

அணிதிரண்டு வாரீர் 
அலைகடல் என வாரீர் 
ஆர்ப்பரித்து வாரீர் 
ஆர்வம் நிறைந்து வாரீர்

                        திருப்பூர் 
                      தம்பிதுரை
                    அமைப்பாளர் 
                கொங்கு நகர் பகுதி       விவசாயத்தொழிலாளர.அணி                       ....      திருப்பூர்

Tuesday, March 13, 2018

அமுதம்

பாறையில்  விழுகின்ற
பாலில் ஒரு துளி 

பசியால் அழுகும் 
பச்சிளம் பாலகனின் 

வாயில் விழுந்தால்
வறுமை ஒழியும் 

பசியில் துடிக்கும் 
குழந்தைகளின் 
வயிறுகள் நிறையும் 

குடிக்கும் பாலைக் 
குடம் குடமாக

கல்லில் ஊற்றி அதை
  சேறாக மாற்றி 

சாக்கடைக்கு செல்லும் 
கழிவுப் பொருளாக.

மாற்றம் பெறுகின்றது 
மடி சுரந்த பால். 

அமுதம் என்பதை 
யாரும் கண்டதில்லை 

நாம் வாழும் உலகில் 
உயிர் வாழும் வகையில்

பசியைப் போக்கும் 
உயிரைக் காக்கும் 

உண்மையான அமுதம் 
உணவுப் பால் தான் 

இதை உணராத
ஜென்மங்கள் 
உலகில் இருப்பது
உண்மையில் வீன்தான்
          தம்பிதுரை....

Friday, March 9, 2018

மகளிர் தினம்

ஒ 

பெண்ணே 
நான் பிறந்தது முதல் 
இன்று வரை 

என்னுடன்
தாயாக.
சகோதரியாக
தோழியாக.
காதலியாக. 
மனைவியாக.
மகளாக.
பேத்தியாக.
பாட்டியாகவும் 

உறவுகளிலும் 
நட்புகளிலும் 
தொடர்ந்து
பயனித்துவரும் 

நீ இன்றி நான் 
இல்லை 
என்ற நிலையில்

ஒருநாள் மட்டும் 
வாழ்த்துச் சொல்லி 

உன்னை 
பிரித்துப் பார்க்க. 
மனமில்லை 

ஆண்டுமுழுவதும் 
என் மனதில்  
அன்பாலே  
மலர்ந்திருக்கும் 
பூமகள் நீ 

நீ  பெண்ணல்ல.
எந்த உறவில் 
இருந்தாலும் 
  நீ தேவதை
         தம்பிதுரை ......

Saturday, March 3, 2018

பார்வை

தூரத்திலிருந்து 
நான் பார்த்தேன் 

துடிக்கும் இளமையில் 
நின்றாள் இளம் மயில் 

தோழன் தோலில் 
சாய்ந்திருந்தேன் 
தோழிகளோடு 
பவனி வந்தாள் 

கண்களைப் 
பார்த்ததும் 
எண்ணங்கள்
அனைத்தும் 

சிற்றெறும்பு போல
சுரு சுருப்பாயின

மின்னலைப் போல.
சிரிப்பு ஒன்று
இதழுக்குள்ளே 
வந்து போயின. 

பட்டாம்பூச்சி  
இமைகளாய் மாறி 
மெல்ல மெல்லவே
மூடித் திறந்தன.

இதழில் பூத்த.
புன்னகை பூக்கள் 
இதயம் வரையில் 
சென்று மணந்தன.

கண்ணில் இருந்த.
காந்த அம்புகள் 
கண்ணைச் 
சிமிட்டினாள் 
பாய்ந்து வந்தன.

பார்க்கவேண்டிய.
விழிகள் இரண்டும் 
பரவசத்தில் 
துள்ளிக் குதித்தன.
 
கண்களைச் சிமிட்டி 
இமைகள் வெட்டும் 
கண்ணியின் 
கண்ணின்  
வெட்டைக் கண்டு 

வானைக் கிழித்து 
மேகம் தாண்டும்
  மின்னல் கீற்று 
தோற்றுப் போயின.

ஜன்னல் காற்றுகள் 
வீசியும் கூட.
ஆனந்தத்தில் முகம் 
வேர்த்துப் போயின.

கண்ணியின் 
கடைக்கண் 
ஜாடையிலே 

இளம்
காளையர்   வீழ்வது 
இந்தப் பார்வையிலே 

            .தம்பிதுரை.....