Friday, April 21, 2017

தாயே

தாயே 

எத்தனை துடிப்புக்களை உள்ளடிக்கி என்னை சுமந்திருப்பாய் நீயே 

சுமப்பது சுகமென்றாலும்
வலியென்பது வேதனைதானே

வேதனையை

 சாதனையாக.
மாற்றிய உன்னை 

இத்தனை ஆண்டுகள் 
எத்தனை எல்லாம் வேதனைப்படுத்தியிருப்பேன்

என்னை அறியாமலும் 
சில அறிந்தும் 

பிள்ளைகளை வளர்ப்பதில்
பெற்றவர்கள் பலரும் பலவிதமாகவே உள்ளனர் 

ஆனால்

உன் வளர்ப்பைக்கண்டு 
பலர் பொறாமையே படுகின்றனர்

உன்னால் மட்டும் 
எப்படி அப்படி  வளர்க்க முடிந்தது 

வசதி வாய்ப்புகள் கிடையாது உன்னை பெற்றெடுத்த.        

 உன் தாய் தந்தையும் கிடையாது  கல்வியறிவும் கிடையாது 

உன்   கனவணின் அறிவையே
பொது அறிவுப் புத்தகமாக. 

மாற்றிக்கொண்ட.   
ஓர் புதுமையானவள் நீ 

சிறு பிள்ளையிலேயே 
தாய் தந்தையை இழந்த நீ 

நம் பிள்ளைகளும் 
நம் போலவே 
பாசத்திற்கு ஏங்கக்கூடாது என

மொத்த பாசத்தையும்   மிக
சுத்தமான பாசமாக.
கொட்டி  நீ வளர்த்ததாக.

நீயே ஒருமுறை 
சொல்லும் போது 

என் நெஞ்சமெல்லாம் 
நெகிழ்ந்து போனது 

என் பிள்ளைகள் 
வெறும்  பிள்ளைகள் மட்டுமல்ல

இந்த தாயென்ற கோபுரத்தை தாங்கிப்பிடிக்கும் தூண்கள் 

உன் சக தோழிகளிடம் 
நீ சொல்லி மகிழ்ந்ததும் 

என் கண்களில் இருந்து 
முத்தாக முத்தாக
  கண்ணீர் நிறைந்தது 

கல்வி 
கற்றவர்களிடமும்  மற்றவர்களிடமும் 

சரிசமமாக பழகும் 
சாமார்த்தியம் பெற்றவள் நீ

உனக்குள் இருந்த.
இந்த அறிவுதான்

இன்று வரையிலும் 
என்னையும் காப்பாற்றுகிறது 

நான் சத்தமிடும் போதெல்லாம் முரடன் என்று முத்திரை குத்தி பயந்து போனாயே   ஏன் 

முரடனாக இருந்தாலும்
பரவாயில்லை 
முட்டாளாக போய்விடுவானோ என்றுதானே

நீ பெற்ற பிள்ளைகளில் 
நான் ஒருவன் மட்டும்  
கல்வியறிவு இல்லாமல் போனேன்
கவலைப்பட்டாய் நீ

  கல்வியறிவு இல்லாமல் போன
காரணமும் அறிவாய் நீ 

நான் முட்டாள் என்பதும் 
ஒரு காரணம் 

ஆனாலும் குடும்பத்தில்
  கஷ்டம்  என்பதுதானே
முழுக்காரணம்  

கல்வியறிவு  இல்லையென்று
என்மீது கவலைப்பட்ட நீயே 

சில ஆண்டுகள் கழித்து
கவலைகள் எல்லாம் மறந்து 

கல்வி 
கற்க வில்லை என்றாலும்   கற்றறிந்த பிள்ளைகளைவிட   உலக அறிவு  கண்டறிந்த.      பிள்ளை  நீ

என்று நீ                                          புகழாரம் சூட்டும் போது  .                  மிக புத்திசாலியோ  நாம்மென்று பெருமிதம் கொண்டதுண்டு 

உன் பொது அறிவின் மகத்துவத்தை                                புரிந்து கொண்டேன் 

இந்த பொது அறிவுதான் 

என்னையும் சில நேரம்  புத்திசாலியாக காட்டியது 

உன் அடங்காத சோகத்தில் 
என் ஆறுதலே மருந்தென்றாய்

கலங்கிப் போனேன் 
என்மீது நீ கொண்ட.
பாசம் கணடு 

அதனால் தான் 
நீ என்னை  

அழைக்க நினைக்குமுன்னே அழைக்காமல் வந்துநிற்ப்பேன் 
உன்  கண் முன்னே 

ஆச்சர்யப்பட்டு போவாய் 
என்ன மாயம் என்று

எத்தனையோ
சோகத்தையும்
சிரமத்தையும்  

வறுமையைகூட.
தாங்கிக் கொள்ளும் நீ

சுடுசொற்களை  
மட்டும்   உன்னால்
  தாங்கி கொள்ள. முடிவதில்லை 

கட்டிய கணவன்
  உன்னோடு
ஒட்டிய உறவுகள் 

நீ பெற்ற பிள்ளைகள் 
என யாரகயிருந்தாலும் 
சுடு சொற்கள் உன் மனதை சுருக்கென்று தைத்துவிடுகிறது

பலமுறை என்னிடம் 
நீ  இதைச் 
சொல்லி சொல்லியே

உன் சோகத்தையும் 
கோபத்தையும் 
கரைத்திருக்கிறாய் 
உனக்குள்ளே

பாசம் இருக்கும் அளவு 
ரோசமும் வைத்திருந்தாய் 

வியந்து போயிருக்கிறேன்
உன் தனித்தும் எப்போதுமே
தளர்ந்து போனதில்லை என்று

குடும்பத்தில் கஷ்டங்கள்
எத்தனையோ இருந்தாலும்
சிறிதளவும் வெளிக்காட்டாமல்

வாழ்கையின் உயரத்தை 
சிகரமென தொட்டாயே  
எப்படி முடிந்தது உன்னால் 

அந்த சூட்சுமம்  என்னவென்று
நானும் அறிந்து கொண்டேன் பின்னால்

ஒழுக்கத்தை
  மிக உயர்வாகவும் 
குடும்ப கெளரவத்தை 
உன் உயிராகவும் 

நீ மதித்துவந்த.
காரணம் தானது

நீ  உன் முந்தானையில் 
முடிந்து வைத்திருந்தது 
சில்லரைக் காசுகள் மட்டுமல்ல பிள்ளைகளின் ஒழுக்கத்தையும்

எழுதிக் கொடுக்கும் 
உயிலில் பத்திரத்தில் கூட.
சரியான பங்கு 
நிச்சயம் இருக்குமென்று 
யாரும் நம்ப முடியாது 

ஆனாலும் 

நீ  சமைத்துவைத்த பலகாரம் 
நடு இரவைக் கடந்தாலும்
பாத்திரத்துக்குள்ளேயே
அவரவர் பங்குகள்
பத்திரமாகவே தான் இருக்கும் 

ஐந்து பொருட்களை

 நான்கு பேருக்கு  

ஒன்னேகால் பங்காக.

உடைத்துக் கொடுப்பவள் நீ 

ஏற்ற தாழ்வு என்பது 
எதிலும் இல்லை உன்னிடம்

பாசமாக இருந்தாலும்  அது 
பணம் பொருளாகவே இருந்தாலும்

மற்ற தாய்களை மட்டம் தட்டி
உன்னை நான் உயர்த்தவில்லை
உன்னை போல் ஒருத்தியை
உலகில் நான் பார்த்ததில்லை 

நீ செய்த தர்மமா 
நான் செய்த தவமா 
நமக்குள்ளே இந்த சொந்தம் 

இந்த ஜென்மத்தில் 
உருவான.
மிக உயர்வான பந்தம்

   தாய்பாசத்தில் தம்பிதுரை

வனம்

வனம்

அடர்ந்த காடு
அதிலே 

ஓங்கி 
உயர்ந்த மலைகள்

உயர்ந்த மலைகளின்
உச்சி வகுந்தெடுத்த
ஆற்றுப் பள்ளம்

மலைகளின் மேலே
கொட்டிய மழைத் துளி

பள்ளம் நோக்கி
பாய்ந்து பெருக்கெடுத்து

காட்டாற்று 
 வெள்ளமென
காட்டிற்கு நடுவிலே

குறுக்கே இருக்கும் 
 அகன்ற பாறைகளின்

நெற்றி மீது  
 ஏறி நின்று 

நெஞ்சை  
 நிமிர்த்திக் கொண்டு

பூமி மீது  
 விழுகின்ற காட்சி 

 வற்றாமல் 
 உயிர் காக்கும் 

 வானத்துக்கும் 
 வனத்துக்கும்
 இணைத்திருக்கும்  
 நீர்வீழ்ச்சி

இந்த வனம்  
 இல்லையென்றால் 

 உயிர்கள் எல்லாம்  
 அழிந்துவிடும்

இந்தவனமே 
  உண்மையில்
 உயிர்காக்கும்  
 நந்தவனமே

உயிரோடு  
 வாழும்போது 
 மனிதன்  
 கான்கின்ற சொர்கம்

உண்மையைச்
 சொன்னால்
நகரம் என்பது நரகம்

வனம் என்பது  
 மனிதனுக்கு
 இயற்கை  
 கொடுத்த வரம் .

............ தம்பிதுரை.......

என் மனைவி

என் மனைவி

நான் நேசிக்கும்
நிஜமான உறவு

என் வாழ்க்கையில்  மகிழ்ச்சியை
வற்றாமல்  வழங்கிக்கொண்டிருக்கும் 
நல்வரவு

என் தாயின் அன்பையும்
என் தந்தையின் ஆற்றலையும் 

என் சகோதர தைரியத்தையும்
எனக்கு ஒன்றாக கொடுப்பவள்

என்னை பின் தொடரும்
என் நிழல் அல்ல அவள்

என் நெஞ்சுக்குள் குடியிருக்கும்
 நிஜமானவள்

காதலித்துக் கைபிடிக்கவில்லை
 கைபிடித்தும் காதலிக்கவில்லை

என்னதான் கொடுத்தாய்
 என்றுதானே கேட்கிறீர்கள்

சோகத்தை கொடுத்தேன்
சுகமாக மாற்றினால்

வறுமையைக் கொடுத்தேன்
 வளமாக ஏற்றுக்கொண்டாள்

பொறுமையை சோதித்தேன்
 பெறுமையாக மாற்றிகொண்டாள்

அருமையான பெண் என்று
 அனைவரும் போற்றினார்கள்

கடுமையான பயிற்சியில்
எனக்கு ஏற்ற துனையாக
நான் மாற்றிக்கொண்டேன்

என்னையே அவளுக்காக
அர்ப்பணித்து நான் ஏற்றுக்கொண்டேன்

அரசனுக்கு பணிவிடைசெய்யும் 
அடியாட்கள் அல்ல அவள்

தெய்வத்திற்கு சேவைசெய்யும்
 தேவனின் அடியாள‍்

பிள்ளைகளுக்கு அவள் தாயல்ல
 நல்ல தோழி

கணவனுக்கு அவள் மனைவியல்ல
 நல்ல தாய்

உறவினர்களிடம் 
அவள் குணம் பற்றி 
உறக்கச் சொன்னேன்

நண்பர்களிடம் அவளின்
 நன்னடத்தை பற்றி 
நன்றி மறக்காமல் எடுத்துரைத்தேன்

மனைவியிடம் மட்டும்
 ஏதுவுமே சொல்லாமல்
மறைத்து விட்டு 
மெளனமாக நின்றுவிட்டேன்

நன்றி கெட்டவன்
நான் என்று  நினைத்து கொண்டு
சத்தமிட்டு சண்டையிடுவாள்
 மகிழ்ச்சியாக ஏற்றுக்கொள்வேன்

நான் செய்த பிழைகளுக்கு
 இதை தண்டனையாக 
மாற்றிகொள்வேன்

அவள் மீது நான் கொண்ட அன்பு
 என் பிள்ளைகளுக்கு தெரியும்

என்னை பெற்றவருக்கும்
அவளை பெற்றவருக்கும்

 ஏன் உறவினர்கள் நண்பர்கள்
 அனைவர்களுக்கும் கூட
 நன்கு தெரியும் ஆனால்

அவளுக்கு மட்டும் தெரியாது
 காரணம் நான் அவளை
பாரட்டியதே கிடையாது

நான் அவளை திட்டுவதாக நினைப்பால்
நிஜமாக சொன்னால்
அவளை நான் திட்டுவதில்லை
பட்டை தீட்டப்படுவது

அறியாமையை 
அவளுக்குள் இருந்து
 அகற்றுவது

பல நேரங்களில்
அந்த அறியாமை தான் 

அவளின் முழுமையான 
அன்பையே மொத்தமாக காட்டியது

அவளுக்குள் கஷ்டங்கள்
ஆயிரம் இருந்தாலும் 

அவள் இருக்குமிடம் நிச்சயம்
 கலகலப்புக்கு பஞ்சமிருக்காது

சில நேரங்களில் இவள் ஒரு 
வயதான சிறுபிள்ளையோ
என்று என்னத் தோன்றும்

என்னதான் இருந்தாலும்
அவள் என் மனைவி 
என் உயிரைக் காக்கும் பெட்டகம்

எனக்கு எல்லா வேலைகளும்
 எல்லா உதவிகளையும்
செய்கிறாள் என்பதால் 
அவள் என் அடிமையல்ல

அவளுக்கு
 நான் எந்த உதவியும்
 செய்யவில்லை என்றாலும் 
அவளின் அன்புக்கு நான் 
அடிமையானவன்

என்னை 
ஆண்டுகொண்டிருக்கும் ராணி
வாழ்க்கையில் உயரத்திற்கு
 நான் ஏறிவந்த ஏணி

உறவுகள் என்னவென்றும்
உலகம் என்னவென்றும் 
உணர்வால் எனக்கு 
உணர்த்திக்காட்டிய ஞானி

மறைக்காமல் உண்மையை
 மறுக்காமல் சொன்னால்

ஒருநாள் அவளைபிரிந்தாலும்   
 உ டைந்து விட்டதோ வலக்கை
முடிந்து விட்டதோ வாழ்க்கை
என்று என்னத் தோன்றும்

இதை சொல்வதற்கு எனக்கு
 எந்தவிதமான வெட்கமில்லை

மாறாக மிகவும் பெருமைகொள்கிறேன்

என்னதான் ஆண்மகனாக
நான் இருந்தாலும்

எனக்குள் இருந்து ஆளும் ஆன்மா
என் மனைவி

முடிந்தால் அவளிடத்தில்
என் மனதின் மறுபக்கத்தை
நான் மடிந்து விழுவதற்குமுன்
 மறக்காமல்சொல்லிவிடுங்கள்

                         தம்பிதுரை

இனிப்பு

இனிப்பு மட்டுமே
உள்ளதென்றால்

இந்த உலகில்
சுவை என்ற சொல்லே
இல்லாமல் போயிருக்கும்

இன்பம் மட்டுமே
உள்ளதென்றால்

இந்த உலகில்
சுகம் என்ற.
 வார்த்தைக்கே
வலு இல்லாமல் 
 போயிருக்கும்

வெற்றி மட்டுமே
உள்ளதென்றால்

இந்த உலகில்
அனுபவம் என்பதே
அழிந்து போயிருக்கும்

எதிர்ப்பதம் என்பது நமக்கு
எப்போதும் தேவையிருக்கும்

எதிர்ப்பதம் எதிர்ப்பதும்
இல்லை என்றால்

நம் வாழ்க்கையில்
முயற்சி என்பதும்
பயிற்சி செய்வதும்
பழக்கமற்று போயிருக்கும்

தடுக்கி விழுந்ததைக்காட்டிலும்
 துள்ளி எழுவதை கண்டு
பெருமை கொள்ளவேண்டும்

எதிரிகளை கண்டு
எப்போதும் நாம்
பயந்து போக கூடாது

எதிரிகளே இல்லை என்றால்
 வெற்றிகள் என்பது நமக்கு
வேகமாகக் கிடைக்காமல்
வெறும் கனவாகவே போகும்

நீ நிஜமானவனாக
இருக்கும் போது

தோன்றி மறையும்
தோல்வியைக் கணடோ

எதிரே வருகின்ற
எதிரியைக் கண்டோ

அஞ்சவேண்டிய
அவசியமில்லை

வெற்றியை  
நெருங்கிவிட்டோம்  

 வெகு விரைவிலே  
அதன்  உச்சத்தை  
 தொட்டுவிடுவோம் என்ற
நம்பிக்கையை மட்டும் 
வளர்த்துக் கொள்ளவேண்டும்

வாழ்த்துக்களுடன் . 
               தம்பிதுரை

அழுகை

அழுகை
மனிதனுக்கு
 இயற்கை கொடுத்த
 மாபெரும் கொடை

அழுகை
உன் ஆனந்தத்தையும்
உன் வேதனைகளையும்
 நீ சொல்லாமலேயே அது
பிறருக்கு சொல்லிவிடும்

அழுகை
சில நேரம் அது
உன் உயிர்காக்கும் 
கேடயமாகிறது
அதுவும் உனக்குத் 
தெரியாமலே

உன் துக்கத்தை 
நெஞ்சுக்குள் 
கரைக்கிறது
உன் சோகத்தை 
வெகுவாக 
குறைக்கின்றது

அழுகைபலவிதம்
ஆனால் எல்லாமே 
 மிக அற்புதம்

கோடி கொடுத்தாலும்
கிடைக்காத சுகம் ஓர்
அழுகையிலே 
கிடைத்துவிடும்

கோடி கிடைத்த 
மகிழ்ச்சியைக்கூட
 இந்த அழுகைதான்
 வெளிக்காட்டும்

நன்றி 
என்பது கூட
 வார்த்தைகளைக் காட்டிலும்
அழுகையே 
மிக அழகான 
கவிதையாக கூறும்

சிரிப்புக்கு பிறகு
 அழுகை மட்டுமே
 உன்னை 
குழந்தையாக காட்டும் 
ஆற்றல் பெற்றது

சிரிப்பைக் காட்டிலும் 
அழுகையே
பல வெற்றிகளையும் பெற்றது

சிரிப்பு உன்னை
அழகானவனாக காட்டும்

அழுகை உன்னை மிகப்
 புதியவனாகக் காட்டும்

அழுகை
உனக்கு பல ஞானத்தைக் கொடுக்கும்

நீ பிறக்கும் போது
 நீ அழுதாலும்
நீ இறக்கும் போது 
பிறரையும் அழவைக்கும்

அழுகை 
அசிங்கமானதல்லா 
ஆழாமானது,   
அற்புதமானது 
 மிகவும் ஆனந்தமானது 

.........தம்பிதுரை......