Friday, January 27, 2017

ஜெ மரணம்

தங்கமே
 இதுவரையில்  
 உழைத்தது
 போதுமென்று  
 ஓய்வெடுத்து 
 உறங்குகிறாயா

 சிங்கமே
 உன் சீற்றத்தின்  
 கண்களை நீ
 திரையிட்டு 
  நித்திரையில் 
   இருக்கின்றாயா 

 புள்ளி மானை  
 துள்ளிக் குதித்த
 பொற்பாதம் ஓய்ந்ததா

 பூங்குயிலாய் பாடிய குரல்
போதுமென்று சாய்ந்ததா

 கர்ஜித்த கனிர்குரல்
 ஓசையின்றி உறங்கியதே

 எதிரிகளை கைநீட்டி
 சவாலுக்கு அழைத்த கரம்


 ஏன் இங்கு 
  கைமடித்து  
 பெட்டிக்குள்  
 உறங்குகிறாய்

 காலத்தின்  
  கட்டாயமா
 இயற்கையின்  
 கோரப்பசிக்கு
 உன் உடலும் இரையானதா

 மக்கள்

 அழுகின்ற கண்ணிரும் 
 வங்கத்து அலைகடலாய்
 ஆற்பறித்து பொங்கியதே

 மக்கள் கதருகின்ற
 ஒலக்குரல்
 வானம் தொட்டு எட்டியதே

 எதையுமே கேட்காமல்
 ஏன் இன்னும் உறங்குகிறாய்

 மக்கள்
 தவிப்பதை காணாமல்
 தன்நினைவின்றி 
  தூங்குகிறாய்

 அம்மா அம்மா என்று
அழுகின்ற குழந்தைகளும்

 அம்மா அம்மா என்று
 அழுகின்ற அம்மாக்களும்

 ஒன்றாக அழும்குரல்
 உன் காதில் விழவில்லையா

 எத்தனையோ போராட்டங்கள்
 போராடி நீ வெற்றி கண்டாய்

 எமனோடு மற்றும் போராடி
 ஏன் அவனை வெள்ளவிட்டாய்

 எதை கேட்டாலும்  
 கொடுக்கும் நீ 

உன் உயிரைக் கேட்டதால்
 கொடுத்துவிட்டாயா

 உன் உடல் மறைந்தாலும்
உன் பகழ் மறையாது

 உன் பிள்ளைகளின்
 உள்மனது  -  அது
 நீ வாழும் கோவில் அது

தத்தளித்துக் கதருகின்ற
தமிழகத்தில் 

 தம்பிதுரையும் 
 ஒருவன் தான்..............

Thursday, January 26, 2017

மரம்

மரம் 

மழையின் தாய் 

மனிதனின் உயிர் மூச்சு

பறவைகள் முதல்
பல உயிர்களுக்கு
நிரந்தர கூடு

நிழல் தரும் தேவதை 

வெப்பத்தை தடுக்கும்
ஓர் குடை

கடினமான மண்ணையும்
 கடினமான பாறைகளையும்
துளைத்துக்கொண்டு
வெளியே வரும்

தன்னம்பிக்கையின்
மற்றொரு பெயர்

மனிதன் உயிர் வாழ
சுவாசக் காற்றை 
 உருவாக்கும்
 இன்னொரு கடவுள்

செடி கொடி மரம் என்று
எதையும் பிரிக்க 
வேண்டாம்

தாவரங்கள் என்ற. 
ஒற்றை சொல்லின்
  குழந்தைகள்

தன்னலமில்லாமல்
சுயநலம் கொள்ளாமல்

உலகுக்கும் 
மனிதனுக்கும்  
வாரி வாரி கொடுக்கும்
முதல் வள்ளல்

மனிதனின் 
உயிர்காக்கும்
 மனிதனின் 
முதல் உறவுகள்

பூக்கள் காய்கள் 
கனிகள் என 

மரங்கள் தருவது 
மனிதனுக்கு மாபெரும் 
சீதனங்கள்

கொழுந்துகள் இலைகள்
தழைகள் வேர்கள் 
காய்கள் பூக்கள் 
மரப்பட்டைகள் என
மரத்தின் எல்லா 
உறுப்புகளும்

 மனிதனின் உயிர் காக்கும்
 மாபெரும் மருத்துவர்கள்

என்னை காக்கும் மரமே இனி 
உன்னை காக்க வருவேன்
 என சபதம் 
 எடுத்துக்கொள்ளுங்கள்

வருங்கால 
 நம் சந்ததிகள்
 வசந்தத்தோடு 
 உயிர்வாழட்டும்

மரம் நடுவோம் 
 நிழல் பெருவோம்
 மரம் தழைக்க கொஞ்சம்
தண்ணீர் கொடுங்கள்

 மரமும் நமக்கு 
 இன்னொரு தாய்   
                                      தம்பிதுரை....

நான் வடிப்பேன் காவியம்

செவ்வண்ணப் பூப்பாதம் .இப்
புவி மீது படும்போது

ஜில் என்று சலங்கை ஒலி
ஜிவ் என்று மேல்லெலும்பும்

ஓடிவந்த வாலிபர்களில்
ஒருவனாக நானிருந்தேன்  

உன் அழகை கண்டவுடன்
ஓரத்தில் ஒதுங்கிவிட்டேன்

துள்ளி ஓடும் புள்ளி மானுக்கு 
வெள்ளிச்சலங்கை கட்டியது போல்

தோகையிளம் மயிலுக்கு
 பொன்னாடை
போர்த்தியது போல்
நீ நடந்தாய்

உன் பாதம் பட்ட மண்ணுக்கு கூட
 பெருமைக்கு மேல் பெருமையடி

வானத்து விண்மீன்கள் 
உன் விழியில் அள்ளிவைத்து
நிலவென்னும் வட்டமுகம் தாங்கியதோ

நீர் தாங்கும் கருமேகம்
நீ வளர்த்த பட்டு வண்ணக்கூந்தலோ

மூங்கிலிலே தோல் செய்து
 வெண்டை பிஞ்சு விரல் வைத்து
கை வீசி நடக்கையிலே  - என்
கண் பட்டு விட்டதடி

கோடி மலர் மணம் உண்டு
உன் கூந்தலுக்கு . அதில்
குறுக்கே எதற்கடி தாழம்பூ

கோவைக்கனியை
இரண்டாய் பிளந்து
கொம்புத்தேனில்
நனைத்தது போல் இதழ்கள்

ஆரடி நிள அழகு கூந்தலை
 கருநாகமென பின்னியிருக்க
தேற்க்கும் வடக்கும் எட்டி எட்டி 
பார்த்து செல்கின்றது

நீர் தாங்கும் குடம் ஒன்றை
நீ தாங்கி போகையிலே
நுலான நுலிடை
அது தாங்குமா
இந்த எடை- என்று
என்மனம் வாடுதடி

ஆடை கொஞ்சம் தூக்கி கட்டி 
அன்னம் என நடைபயின்று

வாழைத்தண்டு காலை காட்டி
 ஏன்னை வதைப்பதேனடி வாலிபமூட்டி

வானவில்லின் வடிவை போல 
வளைந்து நீயும் நாணம் கொள்ள
வானத்து தேவதையே
வந்த விட்டால் உன் வடிவில்

வாலிபவட்டம் முதல்
வயதினர்கள் கூட்டம் வரை

வாய் பிளந்து பார்க்கும் வண்ணம்
 வரைந்து வைத்த ஓவியமே

நீ மட்டும் என்
 வாழ்க்கை துணையாய் 
வந்து விட்டால்
காலமெல்லாம் வடிப்பேன் காவியமே
 தம்பிதுரை