நெஞ்சில் மிதித்து
முகத்தில் உதைத்தும் கோபம் வராமல்
புன்னகை பூக்கவைத்த
புது உறவு பேரன்
அறிதலும் புரிதலும்
அதிகம் பெற்றவன்
கற்றவனுக்கு நிகராக
வித்தைகள் கற்றவன்
சொல்வதைக்
கேட்டு செய்வது
ஓர் அறிவு
செய்வதைப்
பார்த்துச் செய்வது
ஓர் அறிவு
ஒரு வயதில்
இந்த அறிவு
உண்மையில் பேரறிவு
அடித்து உடைத்து
நொறுக்கிய பொருள்
ஏராளம்
அசையா பொருள்களும்
அசைந்தது அவனிடம்
இன்று
அசையும் பொருள்களும்
அசையும் உயிர்களும் கூட.
அசைவின்றி கிடக்குது
அவனின்றி வெற்றிடமாக
குவிந்த.உதடுகள்
கூறிய பார்வை
நீட்டும் விரல்கள்
சத்தமிட்ட குரல்
எல்லாம் இழந்து
வெறிச் சோடிப்போனது
எனது வீடு
கண்ணுக்குள் ஈரமானது
நெஞ்சுக்குள் பாரமானது
தம்பிதுரை ...
No comments:
Post a Comment