நான் பிறந்த போது
இந்த மகிழ்ச்சி
எனக்கில்லை
சிறுமியாக
சுற்றித் திரிந்ததும்
தாய் தந்தை
தோளில் தவழ்ந்ததும்
ஓடியாடி
விளையாடிய போதும்
இந்த மகிழ்ச்சி
எனக்கில்லை
இனிப்புப் புளிப்பு
காரங்களை
சுவைத்தபோதும்
எத்தனயோ பழங்கள்
காய்கள் கடித்தபோதும்
இந்த மகிழ்ச்சி
எனக்கில்லை
பள்ளியிலே
படித்த போதும்
பருவம் அடைந்த போதும்
ஆண் துனை
கிடைத்தபோதும்
இந்த மகிழ்ச்சி
எனக்கில்லை
உணவுக்கு
வழியில்லை
என்னை வறுமையும்
விடவில்லை
உழைக்கவும்
பயமில்லை
வயிற்றிலே
வளருது பிள்ளை
முன்னூறு நாள்
சுமந்தேன்
எத்தனையோ
இன்னல்களை
இடைவிடாது கடந்தேன்
முத்துப் போல் உன்னை
முழுநிலவாய்
பெற்றெடுத்தேன்
மீண்டும் இந்த மண்ணிலே
நானே வந்து பிறந்ததாக
என்னி மகிழ்ந்தேன்
உன்னை
சுமக்கின்ற சுகமிருக்கே
அது சொர்க்கத்திலும்
கிடையாது
சொர்க்கமே
இதுதான் என்று
நான் சொன்னாலும்
புரியாது
உன்னை
தோளில் சுமக்கும்
இந்தத் தருணம்
என் வாழ்வில்
கிடைத்த. உச்சசுகம்
பிறந்த பலனை
நான் அடைந்தேன்
அடுத்த பிறப்பு என்பதை
நான் மறந்தேன்
உறவு என்று
உன்னை சுமந்தேன்
என் உலகமும் சுகமும்
இதுவென மகிழ்ந்தேன் .
..தம்பிதுரை ...
No comments:
Post a Comment